Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்தியபிரதேசத்தில் பழுதான ரெயிலை கைகளால் தள்ள வைத்த அவலம்

ஆகஸ்டு 31, 2021 10:18

போபால்: சாலையில் நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், பஸ் போன்ற வாகனங்களை பொதுமக்கள் தங்களது கைகளால் தள்ளிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். ஆனால், ரெயில் ஒன்றை கைகளால் தள்ளிய வினோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில், ரெயிலில் சென்று ரெயில்வே வழித்தட பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை ரெயில்வே ஊழியர்கள், அங்குள்ள பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கைகளால் தள்ளி சென்றனர். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரெயில் பெட்டியை கைகளால் தள்ள வைத்த ரெயில்வே அதிகாரிகளின் செயல் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்புச்செய்திகள்